Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
About Nanjil Vellalar
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ?Back to List
அன்பு சொந்தங்களே ,
வணக்கம், வாழ்த்துக்கள் !
தங்களோடு மீண்டும் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் .

நமது சமுதாயத்தின் பெயர் பற்றிய விபரம் அறிய,
Dr T. வேலப்பன் - [ முன்னாள் முதல்வர் - இந்து கல்லூரி  - நாகர்கோயில் ] அவர்களை  இரவி புதூரில் நேரில் சந்தித்தோம் .
அவர் மிகுந்த ஆர்வத்துடன் , அவரிடம் உள்ள ஆதாரங்களை அளித்தார் , அனைத்தையும் புகைப்படங்களாக எடுத்து PHOTO GALLERY -ல் NANJIL VELLALAR PROOF என்ற தலைப்பில் வெளியிட்டுளோம் .
இதில் முக்கியமானது , திருவாங்கூர் சமஸ்தானத்தால் வெளியிடப்பட்ட
  THE TRAVANCORE STATE MANUAL "-  { இப்புத்தகம் சுதந்திரத்துக்கு முன் வெளியிடப்பட்டது }  மற்றும்  "SOCIAL CHANGE AMONG THE VELLALAS OF NANJINAD ".
மேலும் நமது சமுதாய கோயில்களிலும் , திருவாங்கூர் சமஸ்தான ஆவணங்களிலும்  நம்மை  சுதந்திரத்திற்க்கு முன்பிருந்தே நாஞ்சில் வெள்ளாளர் (அ) நாஞ்சில் நாடு வெள்ளாளர் என குறிப்பிட்டுள்ளார்கள் .

தமிழ் பிறந்த நாஞ்சில் நாட்டில் , உருவான சொல்லே வெள்ளாளர் என்ற சொல் .
இன்றும் தமிழ் பாட புத்தகங்களில் நாஞ்சில் நாட்டு சொல் என்று வருவதை தமிழ் ஆசிரியர்கள் அறிவர் .
தமிழக அரசின் LIST OF COMMUNITY பட்டியல், நாஞ்சில் வெள்ளாளர் இணையதளத்தில்,{ www .nanjilvellalar .com }  DOWNLOAD -ல்  வெளியிடபட்டுள்ளது  காண்க . இதில் அனைத்து  வெள்ளாளர்களையும் , VELALAR என்று குறிப்பிடாமல் VELLALAR என்றே குறிப்பிடப்பட்டுள்ளது .

VELLALAR என்ற ஆங்கில சொல்லுக்கு தமிழில் வேளாளர் என்ற பொருள் மட்டுமே உள்ளதாக ஒரு பத்திரிகை புது விளக்கம் அளித்துள்ளது .

வேளாளர் என்பது பூமியை (மண் ) பயன்படுத்தி உற்பத்தி செய்பவர்கள் - இதில் விவசாயம் , மண்  பாண்டம் ( சட்டி , மண்பானை போன்ற பொருள்கள் ) , மண் பொம்மை மேலும் இது போன்ற பல அடங்கும் .
வெள்ளாளர் என்பது வெள்ளத்தை (நீர் ) பயன்படுத்தி உற்பத்தி செய்பவர்கள் - இதில் விவசாயம் மட்டுமே அடங்கும் .

நாஞ்சில் நாட்டில் பிறந்த வெள்ளாளர் என்ற  சொல்லை நாஞ்சில் நாட்டில் பிறந்த நாமே மாற்ற நினைப்பது சரியா ?
தமிழக அரசின்  COMMUNITY பட்டியலில் VELLALAR என்று உள்ளதை VELALAR என்று மாற்ற நாம் நினைப்பதன் அவசியம் என்ன?

பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது போல் , சுதந்திரம் பெற்று  66 ஆண்டுகளுக்கு பின் நமது சமுதாயத்தின் பெயரை ஆராய்வது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது . ஏனெனில் நமக்கு முன்னோர்கள் அளித்த பெயரை,  பின் வரும் தலைமுறையினர் மாற்றியதால் [அ] மாற்ற முயற்சி செய்வதால் , நம் அடையாளத்தையும் இழந்து , பல தலைமுறை பாதிப்பும் அடைத்துள்ளது .


மேலும் நமது சமுதாயத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை சொல்லி வருவது, மற்றவர்கள் இடையே நாம் பல பிரிவினர் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது . எடுத்துககாட்டாக ஒரு பத்திரிகை "வெள்ளாளர்களின் மொத்த பிரிவுகள் என்று 153 முகங்கள் உள்ளன " தொடர்ந்து  கூறி வருகிறது . இதில் நம்மையே மூன்றாக குறிப்பிடுகிறது . ( கன்னியாகுமரி  வெள்ளாளர், நாஞ்சில் வெள்ளாளர், நாஞ்சில் நாட்டு  வெள்ளாளர் )

 இனி வரும் சந்ததிகள் பயன் பெற வேண்டுமாயின் , இந்த சமுதாயத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரே பெயரை சொல்ல வேண்டும் .

இறைவன்,  நம் அனைவரின் காதுகளிலும் ' உன் சமுதாயத்தின் பெயர் இது ' என்று கூறுவார் என காத்திருக்க வேண்டாம் . நாம் அனைவரும் அவரவர் சார்ந்திருக்கும் சங்கங்களில் விவாதித்து , நம் சமுதாயத்தின் பெயரான "நாஞ்சில் வெள்ளாளர்" பெயரில் சங்கத்தின்  பெயரை  மாற்றம் செய்வோம்.