Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
தசாவதானி பி. ஆறுமுகம் பிள்ளைBack to List


தசாவதானி பி. ஆறுமுகம் பிள்ளை

குமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள கோட்டாறு என்ற ஊரில் திரு. பிரமநாயகம் பிள்ளை என்ற சிவ பக்தருக்கும் ,திருமதி தென்கரைப் பிள்ளை என்ற அம்மையாருக்கும் ஒரே மகனாக 7 -3 -1892 அன்று பிறந்தார்.

இவர் சிறு வயதிலேயே திருகுறள்,மூதுரை, சிலப்பதிகாரம்,தொல்காப்பியம் , நன்நூல்,தேவார திருமுறைகள் போன்ற 53 நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

இவர் நாகர்கோவில் இடலாக்குடியில் வசித்த தசாவதானி மேதகு செய்குத்தம்பிப் பாவலர் அவர்களின் சீடராக இருந்து தசாவதானம் கற்றுக் கொண்டார்.

தசாவதானி அவர்கள் நெல்லை மாவட்டம் ஏர்வாடி என்ற நகரத்தில் தனது முதல் அவதானத்தை தன் குரு தலைமையில் முதல் அவதானத்தை, 29 ஆவது வயதில் செய்தார்.

கொழும்பு ,நெல்லை, தூத்துக்குடி,சென்னை போன்ற பல இடங்களில் 30 அவதானங்கள் செய்துள்ளார்கள்.

ஆறுமுகனார் திருவாடுதுறை ஆதீன முதல் சைவப் பிரசாகராக பத்து வருடங்களுக்கு மேல் பணியாறறினர்கள்.

தசாவதானியார் தாணுச்சதகம், சேர மண்டலச்சதகம்,குசேல வெண்பா எனற நூல்களை இயறறி உள்ளார்.