Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
என்.எஸ்.கிருஷ்ணன்Back to List
என்.எஸ்.கிருஷ்ணன்

"கலைவாணர்' என்று தமிழகம் பெருமையுடன் அழைக்கும் நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவில் ஒழுகினசேரியில் நவ.,29, 1908ல் பிறந்தார். நான்காம் வகுப்புடன் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வறுமையில் வாடிய இவர், நாடகக் கொட்டகைகளில் சோடா கலர் பானம் விற்றுப் பிழைத்தார்.

அப்போது அவரைக் கவர்ந்தது நாடகக் கலை. 1925ல் டி.கே.எஸ்., சகோதரர்கள் நாடகக் குழுவில், 17வது வயதில் சேர்ந்தார். 1935ல் டி.கே.எஸ்., சகோதரர்களின், "மேனகா' திரைப்படம், இவரது புகழை மேலும் வலுவடையச் செய்தது.

சிறந்த சிந்தனையாளர், மனிதாபிமானி, கொடைவள்ளல், நகைச்சுவை அரசு என்றெல்லாம் பாராட்டப்பட்டவர்.

1955ல் தென்னிந்திய நடிகர் சங்கம் இவருக்கு "கலைவாணர்' என்ற பட்டம் அளித்து பாராட்டியது. தமிழக மக்களைக் குலுங்க குலுங்க சிரிப்பில் ஆழ்த்திய நகைச்சுவை மன்னர் ஆக., 30, 1957ல் காலமானார்.
Please also refer
www.kalaivanar.com