Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
About Nanjil Vellalar
நாஞ்சில் வெள்ளாளர் இணையதள குழுமம்Back to List
15-04-2012
அன்பு சொந்தங்களே ,
வணக்கம், வாழ்த்துக்கள் !
தங்களோடு தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் . 

1947 முதல் 2012 வரை - முன்னேறிய வகுப்பில் [FC(or) OC] இருந்து பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்கு மாற்ற முடியாமல் இருப்பதற்கு நம்மிடையே உள்ள தடங்கல்களை பற்றி அலசுவோம் :
 
 இந்த விஷயத்தில் சங்கங்களே பிரதானம் . சங்கங்கள் தங்களுக்குள் ஒருமித்த கருத்தும் , தமிழக அரசு ஒப்பு கொள்ளும்படியான ஆவணங்களும் , சமுதாய மக்களின் எண்ணங்களும் , தொலைநோக்கு சிந்தனைகளுடன் கூடிய கருத்துக்களும் ,தெளிவும், வேகமும்  சங்கங்களுக்கு அவசியமாகிறது .

 திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த நாஞ்சில் நாடு , 1947 சுதந்திரத்துக்கு பின் கேரளத்துடன் இணைத்து ,பின் பெரும் போராட்டத்திற்கு பிறகு   1956 -ல் தாய் தமிழகத்துடன்  இணைத்தது . அதிலிருந்து  இன்றைய  வரை   நமது இனம் , இந்து வெள்ளாளர் என்றே தமிழக அரசினால் ஆவணங்களில் பதிவு செய்ய படுகிறது .

இதில் இந்து என்பது மதத்தினையும், வெள்ளாளர் என்பது இனத்தினையும் குறிப்பதாக அமைத்துள்ளது .
 
ஆனால் நாம்  பிற்படுத்தப்பட்டோர் [BC] பட்டியலில் இணைய வேண்டுமாயின், வெள்ளாளர்  இனத்தின்  உட்பிரிவு அவசியம் . எடுத்துக்காட்டாக  தமிழ் நாட்டிலுள்ள வெள்ளாளர்  இனத்தின்  சில  உட்பிரிவுகளை கீழே கொடுத்துள்ளோம் :
சோழிய   வெள்ளாளர், பாண்டிய   வெள்ளாளர், கொங்கு  வெள்ளாளர், தொண்டை மண்டல வெள்ளாளர், ஆறு நாட்டு   வெள்ளாளர், துளுவ வெள்ளாளர், கார்காத்த வெள்ளாளர் , சைவ  வெள்ளாளர், சேர வெள்ளாளர் மற்றும் பல .

வெள்ளாளர் உட்பிரிவு நூற்றுக்கும் மேல் உள்ளது . மொத்த வெள்ளாளர் உட்பிரிவுகளில் , சுமார்  4 உட்பிரிவுகள் மட்டுமே முன்னேறிய இனம் [Forward Community (FC)] அல்லது மற்ற இனம் [Other Community (OC)] என்ற பிரிவுகளில் உள்ளார்கள் . 

மற்றைய  வெள்ளாளர் உட்பிரிவினர் அனைவரும்  பிற்படுத்தப்பட்டோர் [BC], மிகவும்  பிற்படுத்தப்பட்டோர் [MBC]  பட்டியலில் உள்ளார்கள் .  தமிழக அரசின் LIST OF COMMUNITY பட்டியல், நாஞ்சில் வெள்ளாளர் இணையதளத்தில்,{ www .nanjilvellalar .com }  DOWNLOAD -ல்  வெளியிடபட்டுள்ளது  காண்க .

முன்னேறிய இனம் [Forward Community (FC)] அல்லது மற்ற இனம் [Other Community (OC)] என்ற பிரிவுகளில் உள்ள நான்கு
வெள்ளாளர்களில்  நம்மை தவிர [ நாஞ்சில் வெள்ளாளர் ]  மற்றைய  வெள்ளாளர்களின் உட்பிரிவு தமிழக அரசு ஆவணங்களில்  (பள்ளி . பதிவு துறை , சாதி சான்றிதழ் ) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது .

ஒரு இனத்தை  பிற்படுத்தப்பட்டோர் [BC], மிகவும்  பிற்படுத்தப்பட்டோர் [MBC]  பட்டியலில் சேர்க்க வேணுமாயின் அவ்வினத்தின் உட்பிரிவு மிகவும்  அவசியம் . நாம் , நம்மை  இந்து வெள்ளாளர் என்றே  ஆவணங்களில் ( பள்ளி . பதிவு துறை , சாதி சான்றிதழ் ) பதிவு செய்கிறோம் , இவ்வாறு பதிவு செய்வதால் , சாதிவாரி சமூக , கல்வி ,மற்றும் பொருளாதார  மக்கள் தொகை கணக்கெடுப்பு  எப்போது எடுத்தாலும் ,நாம் எந்த உட்பிரிவின் கீழ் வராமல் உள்ளத்தால், மீண்டும் முன்னேறிய இனம் [Forward Community (FC)] அல்லது மற்ற இனம் [Other Community (OC)] என்ற பிரிவிலேயே அரசினால் வைக்கப்படுவோம் . எனவே இதில் எச்சரிக்கையுடனும் , தெளிவுடனும் இருப்பது அவசியமாகிறது .

சுதந்திரத்திற்க்கு முன்னேயே   நமது மக்கள் ,ஒவ்வொரு கிராம பெயரிலேயே இனத்தை வைத்து இணைத்துள்ளார்கள் . எடுத்துக்காட்டாக   வடசேரி வெள்ளாளர், புத்தேரி  வெள்ளாளர், இறச்சகுளம்  வெள்ளாளர், பறக்கை  வெள்ளாளர், நாவல்காடு  வெள்ளாளர், கடுக்கரை வெள்ளாளர், செண்பகராமன்புதூர்  வெள்ளாளர், தோவாளை வெள்ளாளர், கரியமாணிக்கபுரம்  வெள்ளாளர், குலசேகரம்புதூர்  வெள்ளாளர், தேரூர் வெள்ளாளர், குழித்துறை  வெள்ளாளர்,  தாழாக்குடி வெள்ளாளர், ஈத்தாமொழி வெள்ளாளர், இரவிபுதூர்  வெள்ளாளர், வடிவீஸ்வரம்  வெள்ளாளர் மற்றும் பல .
இப்போது நாம் நம் உட்பிரிவை எவ்வாறு தேர்வு செய்வது என்பதை ஆராய்வோம் :
நமது மக்கள் திருமண தேடுதலின் போது, நம்மை அடையாளபடுத்த  இந்து வெள்ளாளர் , நாஞ்சில் வெள்ளாளர், நாஞ்சில் நாடு வெள்ளாளர், அசைவ வெள்ளாளர், கன்னியாகுமரி  வெள்ளாளர், நாகர்கோயில்  வெள்ளாளர் என  பலவாறு குறிப்பிடுகிறார்கள் .

இந்து வெள்ளாளர்: இந்து என்பது மதத்தினையும், வெள்ளாளர் என்பது இனத்தினையும் குறிப்பதாக அமைத்துள்ளது .இதில்  உட்பிரிவு இல்லை .
அசைவ வெள்ளாளர் : சைவ வெள்ளாளர் என்று ஒரு வெள்ளாளர் பிரிவு உள்ளது . அவர்களும் நம்மை போல் சைவ சமயத்தை சார்த்தவர்கள். உணவில் அவர்கள் சைவம் , ஆனால் நாம் அசைவம் . அவர்கள் சைவ சமயத்தை சார்த்தவர்கள் என்பதால் தங்களை "சைவ வெள்ளாளர் " என குறிப்பிடுகிறார்கள் . உணவு  பழக்கத்தை வைத்து அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டுகிறோம் . நம்முள் சிலர் நம்மை அடையாளப்படுத்த உணவு  பழக்கத்தை வைத்து அசைவ வெள்ளாளர் என குறிப்பிடுகிறார்கள் . இது  தவறு . மேலும்  நாம் பல சம்பிரதாய பழக்க வழக்கங்களில் சைவ வெள்ளாளர்களிடமிருந்து மாறுபடுவதால் நம்மை "சைவ  வெள்ளாளர்" என்றும் அழைக்க இயலாது .
கன்னியாகுமரி  வெள்ளாளர் & நாகர்கோயில்  வெள்ளாளர் :
கன்னியாகுமரி நகரையோ (அல்லது )  மாவட்டத்தையோ சார்ந்த வெள்ளாளர் , நாகர்கோயில் நகரை  சார்ந்த வெள்ளாளர் என்பதை மற்றவர்கள் அறியும் பொருட்டு தங்களை இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் .
தமிழக அரசு , ஒரு இனத்தின் உட்பிரிவை குறிப்பிடும் போது , தற்போதைய நகரின் பெயரையோ அல்லது மாவட்டத்தின் பெயரையோ வைக்க கூடாது என்று அறியுருத்துகிறது . ஏனெனில் , மாவட்டம் மக்கள் தொகைக்கு ஏற்ப  மாறுதலுக்கு உட்பட்டது . தற்போதைய நகரின் பெயரும் மாறுதலுக்கு உட்பட்டது . எனவே இவ்விரு பெயர்களும் ஏற்புடையது அல்ல . சுதந்திரத்திற்க்கு முன் உள்ள இடங்களின்  பெயர்களை உட்பிரிவாக கொள்ளலாம் .அவ்வாறே மற்ற  வெள்ளாளர்கள் தங்களின் உட்பிரிவை அடையாளபடுத்தி உள்ளார்கள் .

சுதந்திரத்திற்க்கு முன்,  திருவாங்கூர் அரசு - கன்னியாகுமரி முதல் கொச்சி வரை எல்லையாக கொண்டு பல நாடுகளை உள்ளடக்கி ஆண்டு வந்தது .இதில் நாஞ்சில் நாடும் ஒன்று (அப்போது நாஞ்சில் நாட்டின் தலை நகரம் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோயில் அல்ல ) இதன் எல்லைகள் பல காலங்களில் மாறுபட்டு வந்துள்ள போதிலும்  நாஞ்சில் நாடு , 1947 சுதந்திரத்துக்கு பின் கேரளத்துடன் இணைத்து ,பின் பெரும் போராட்டத்திற்கு பிறகு   1956 -ல் தாய் தமிழகத்துடன்  இணைத்தது .அதுவே இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் . கன்னியாகுமரி உலக அளவில் புகழ் பெற்ற பெயராக இருந்த போதிலும் , வரும் காலங்களில்  மக்கள் தொகை அதிகரிப்பால் இரண்டாக பிரிய வாய்ப்புள்ளது . எனவே  இப்பெயரை (கன்னியாகுமரி  வெள்ளாளர்) அரசு ஏற்காது .

"சோழ நாடு சோறுடைத்து " என்பதை போல் திருவாங்கூர் சமஸ்தானத்தின் நெற்க்களஞ்சியமாக "நாஞ்சில் நாடு " திகழ்ந்தது . இங்கிருந்தே நம் முன்னோர்கள் வேலை மற்றும் வியாபார நிமித்தமாக பல்வேறு இடங்களுக்கும் இடம் பெயர்ந்தார்கள்  மேலும் , நமது சமுதாய கோயில்களிலும் , திருவாங்கூர் சமஸ்தான ஆவணங்களிலும்  நம்மை  சுதந்திரத்திற்க்கு முன்பிருந்தே நாஞ்சில் வெள்ளாளர் (அ) நாஞ்சில் நாடு வெள்ளாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது .
எனவே நம்மை  "நாஞ்சில் வெள்ளாளர்" என்ற  இன - உட்பிரிவை அரசிடம் பதிய வைப்பது , நமக்காக போராடும் நம் இன சங்கங்களின் கடமையாகிறது . தனி மனிதன் அரசிடம் இதை தெரிவிக்க இயலாது . இதற்காகவே அனைவரையும் சங்கங்களில் உறுப்பினராக வலியுருத்துகிறோம் . உறுப்பினர்களின் செயல்பாடே , சங்கங்களின் சக்தி ஆகிறது . சங்கங்களின் சக்தி சமுதாய சக்தி ஆகிறது .
துரதிஷ்டவசமாக 2010 வரை , எந்த சங்கமும் அரசிடம் இப்பெயரை [ நாஞ்சில் வெள்ளாளர் ]  பரிந்த்துரைக்கவில்லை . 
2011 - 2012 ல் பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கம்    நம்மை  "நாஞ்சில் வெள்ளாளர்" என பதிவு செய்துள்ளது .

வேளாளர் என்பதிலும் , வெள்ளாளர் என்பதிலும் பெரும் பொருள் வித்தியாசம் இல்லை எனினும் இலக்கியத்திலும் , சொல் வழக்கத்திலும் மட்டுமே வேளாளர் என்ற பெயர் தற்போது உள்ளது . தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இல்லை .  எனினும் நம் கவலையெல்லாம்  அரசாங்க பட்டியலில் வேளாளர் என்ற பெயரே இல்லாமல் இருக்க, {download -ல் காண்க }. நம்மவர்கள்  இபபடி கொடுக்க , இதனால் நமக்கு கைக்கெட்டும் நிலையில் உள்ள அரசாங்க சலுகைகள்  இன்னும் தள்ளி போகுமோ என்ற அச்சம் உண்டாகிறது ,
இதை நம் சமுதாய சான்றோர்கள் விரைவாக முடிவெடுக்கவும் .
நாஞ்சில் வெள்ளாளர்  சமுதாயத்தில்  பிறந்த நாம்  மட்டும் ஏன் "போராட்டமே வாழ்க்கை " என எந்த சலுகைகளையும் அரசிடம் பெறாமல் , கல்வி , வேலை வாய்ப்பு , வாழ்க்கை தரம் போன்ற அனைத்து வழிகளுக்கும், தனி தனி குடும்பங்களாக போராட வேண்டியுள்ளது என்ற ஆராய்ச்சியின் வெளிப்பாடே இது .
நமது மக்களில் 85 % பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர் .
மக்களே , நம்மை  முன்னேறிய வகுப்பில் இருந்து,  பிற்படுத்தப்பட்டோர் [BC] பட்டியலில் சேர்க்க வேண்டாம் என தயவுசெய்து யாரும் கூறாதீர்கள் . நாம் சிந்தனையில் , அறிவில் சிறந்தவர்களாக இருப்பினும் , பொருளாதாரத்தில் மற்ற வகுப்பினரைவிட மிகவும் கீழ் தங்கி உள்ளோம் . அரசினால் மக்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் [ கல்வி .வீடு , வேலைவாய்ப்பு , புதிய தொழில் / தொழில் முன்னேற்றம் மேலும் பல ] , எதையும் பெற முடியாத சூழலில் உள்ளோம் . ஒதுக்கி வைக்க பட்டுள்ளோம்

பலர் தினம் உழைத்தே , மிக சிரமத்துடன்  தங்கள் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்துகிறார்கள், எந்த பக்க உதவியும் இல்லாமல் .
இதன் காரணமாகவே நம் மக்களிடம் பண விஷயத்தில், எப்போதும் ஒரு கோபம் அல்லது எச்சரிக்கை தன்மை  இருந்துகொண்டே இருக்கிறது . முதலில்  நம்மைவிட பொருளாதாரத்தில் கீழ் உள்ளோருக்கு நாம் பல வழிகளில் கை கொடுப்போம் . அவர்கள் ,பலருக்கு கை கொடுக்கட்டும் . எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், உங்களால் முடித்த வரையில் உதவி செய்யுங்கள் . இதனால் நம் சமுதாய மக்களிடம் உள்ள கோபம் வெளியேறி , அன்பு பெருகட்டும்  .

சுதந்திரத்திற்க்கு முன் சொத்து பங்கு பிரிப்பில்  மக்கள் வழி, மருமக்கள் வழி என இரு பிரிவாக இருந்த நாம்,  தற்போது  ஒரே பிரிவாக இணைத்துவிட்டோம் . உணவு , சமய உணர்வு , மொழி வடிவம் ,கலாச்சாரம் , பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறையில் நமக்குள் பெரும் மாற்றங்கள் இல்லை .
 ஆனால் மற்றைய  வெள்ளாளர் உட்பிரிவினரிடம் இருந்து உணவு , மொழி வடிவம், கலாச்சாரம் , பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறையில்  மாறுபட்டுள்ளோம் .

 ஒவ்வொரு நாஞ்சில் வெள்ளாள சமுதாய மக்களிடமும்  இதை தெளிவுடன் புரிய வைப்பது , நம் சமுதாய பெரியோர்கள் மற்றும் சங்கங்களின் கடமையாகிறது . 
ஒவ்வொரு கிராம / ஊர் பெயரில்  இனத்தை குறிப்பிடும்போது , உட்பிரிவோடு சேர்த்து குறிப்பிட வேண்டுகிறோம் ,
எடுத்துக்காட்டாக   வடசேரி நாஞ்சில் வெள்ளாளர், புத்தேரி நாஞ்சில் வெள்ளாளர், இறச்சகுளம் நாஞ்சில் வெள்ளாளர், பறக்கை நாஞ்சில் வெள்ளாளர், சென்னை நாஞ்சில் வெள்ளாளர், நெய்வேலி நாஞ்சில் வெள்ளாளர், ஓசூர்  நாஞ்சில் வெள்ளாளர், டெல்லி   நாஞ்சில் வெள்ளாளர் , USA நாஞ்சில் வெள்ளாளர்  என குறிப்பிட வேண்டுகிறோம் .
 பள்ளி, அரசு ஆவணங்களில் நாஞ்சில் வெள்ளாளர் என குறிப்பிட வேண்டுகிறோம் .
வரும் சாதிவாரி சமூக , கல்வி ,மற்றும் பொருளாதார  மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தயாராவோம் .
நாஞ்சில் வெள்ளாளர் பெயரில் , சமுதாய சங்கங்களை மாற்ற / துவக்க வேண்டுகிறோம் .
நன்றி !!!
அன்புடன் ,
நாஞ்சில் வெள்ளாளர் இணையதள குழுமம்
தொடர்புக்கு : 09840209568
email : service@nanjilvellalar.com
=====================================================