Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியன்Back to List
பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியன்

நாகர்கோவில் வடசேரியில் பிப்., 18, 1926ல் பிறந்த பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம், உலகப்புகழ் பெற்ற தமிழ் அறிஞர்.

நெல்லை, திருவனந்தபுரம், கேரளப் பல்கலைக் கழகங்களில் தமிழ்ப் பணியாற்றியவர்.

1981ல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர்.

நாகர்கோயிலில் வடசேரியில் 1926 ல் பிறந்த வ.அய்.சுப்ரமணியம் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் புகுமுகவகுப்பும் இளங்கலையும் படித்துவிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தமிழில் முதுகலை முடித்தார்.

அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலையில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியோரைப்போல திருவனந்தபுரத்தில் நெடுநாள் பணியாற்றினார். 1965 வரை கேரள பல்கலைகழகத்தில் தமிழ்த்துறைத்தலைவராக இருந்தார்.

மேலைநாட்டு பல்கலைகழகங்களில் நடக்கும் தமிழாய்வுகளை எல்லாம் தமிழகத்தில் ஒருங்கிணைக்கவும் அந்த தரத்திலான தமிழாய்வுகள் இங்கே நடக்கவும் ஓர் உலகத்தரமான பல்கலைக் கழகம் தேவை என்று உணர்ந்த எம்ஜியார் தஞ்சை தமிழ்பல்கலைகழகத்தை ஆரம்பித்தார்.

1981ல் தஞ்சை தமிழ்பல்கலைகழகத்தின் நிறுவன துணைவேந்தராக பணியாற்ற ஆரம்பித்த வ.அய்.சுப்ரமணியம் 1986ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டபோது அப்போதைய அரசியலாளர்களால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

அவர் உயர்பதவிகளில் இருந்தமையால் எப்போதுமே அவரைத்தேடி வருபவர்களிடம் மிக எச்சரிக்கையாக இருப்பார். நம்மவர்கள் இரண்டாம் சந்திப்பிலேயே சிபாரிசு கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

பல்வேறு உயர்பதவிகளை வகித்த வ.அய்.சுப்ரமணியம் தன் ஊதியத்துக்குமேல் எதையுமே ஈட்டியரவல்ல. தன் குடும்ப சொத்தான ஓட்டுவீட்டில் சாதாரணமாக குடியிருந்தார்.

அ.கா.பெருமாள் வ.அய்.சுப்ரமணியம் அவர்களைப்பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார். வ.அய்.சுப்ரமணியம் தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் எந்தவிதமான முறைமையும் இல்லாமல் முழுமையான வாசிப்பு இல்லாமல் விருப்பப்படி தமிழாராய்ச்சி செய்வதன்மேல் ஒருவகையான பொறுமையின்மை கொண்டிருந்தார். அத்தகையவர்களை அவர் நெருங்கவே விடுவது இல்லை. அதேசமயம் உண்மையான ஆய்வாளர்களுக்கு மிக இனியவராக ஆகி நெருங்குவ்து அவர் இயல்பு.

அ.கா.பெருமாள் வ.அய்.சுப்ரமணியம் அவர்களுக்கு அண்மையானவராகவே இருந்தார். எம்.ஜி.ஆர்தஞ்சை தமிழ்பல்கலைக் கழகத்தை வ.அய்.சுப்ரமணியம் அவர்களின் ஆலோசனைப்படி அவரை முன்னிறுத்தியே தொடங்கினார். உலகத்தரமான ஒர் தமிழாய்வு நிறுவனமாக தஞ்சை தமிழ்பல்கலையை உருவாக்க வ.அய்.சுப்ரமணியம் அவர்களால் முடிந்தது. அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை சுந்தர ராமசாமி அவரது ஒரு கட்டுரையில் சொல்கிறார். பல்கலை துணைவேந்தராக வ.அய்.சுப்ரமணியம் பொறுப்பேற்று அமர்ந்திருக்கும்போது எம்.ஜி.ஆர் அவரைச் சந்திக்க பல்கலைக்கு வந்தார். எம்ஜிஆர் வரும்செய்தி வ.அய்.சுப்ரமணியத்துக்கு அறிவிக்கப்பட்டது. வ.அய்.சுப்ரமணியம் வாசலுக்கு வந்து எம்.ஜி.ஆர்ரை சந்தித்து வரவேற்க வேண்டும் என்று சில சொன்னார்கள். மரபுப்படி துணைவேந்தர் கவர்னரை மட்டுமே அப்படி வரவேற்க வேண்டும், மரபுகளை மீறக்கூடாது என்று வ.அய்.சுப்ரமணியம் மறுத்துவிட்டார். அதை எம்.ஜி.ஆரும் புரிந்துகொண்டார்.

குப்பம் திராவிடப் பல்கலைக்குப் பொறுப்பேற்று தமிழாய்வுக்கும் தென்னிந்தியப் பண்பாட்டாய்வுக்கும் அவர் அரும்பணியாற்றியிருக்கிறார். கிட்டத்தட்ட தஞ்சை பல்கலை செய்ய நினைத்ததை அவர் குப்பம் திராவிட பல்கலையில் செய்து முடித்தார். இன்று தமிழ் பண்பாட்டாய்வில் முக்கியமான எல்லா நூல்களும் குப்பம் திராவிடப் பல்கலை வெளியீடாக வந்தவையே

வ.அய்.சுப்ரமணியம் அவர்களின் பங்களிப்பு - மரபான தமிழறிஞராக இருந்தாலும் அவர் அமெரிக்க பல்கலையில் பயின்றவர். ஆகவே முறைமை மீது அழுத்தமான பற்று கொண்டவர். தமிழாய்வை அறிவியல் விதிகளின்படி மட்டுமே நடத்தவேண்டும் என்பதில் மிகுந்த பிடிவாதத்துடன் இருந்தார். தமிழாய்வு என்றால் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துதல் என்ற சமவாக்கியம் இருந்த சூழலில் இந்த அறிவியல் அணுகுமுறையே அவர் தமிழுக்கு அளித்த பெரும் கொடை.

இந்நோக்கு மொழி ஆய்வில் அறிவியல் அடிப்படையை என்றுமே வலியுறுத்திய எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களிடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டது. வ.அய்.சுப்ரமணியம் அவர்களின் ஆழமான தமிழ்ப்பற்றுதான் தமிழாய்வுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணிக்கச் செய்தது. ஆனால் வ.அய்.சுப்ரமணியம் அந்த தமிழ்ப்பற்று தன் ஆய்வுக்கு குறுக்கே வர அனுமதித்தவரல்ல. இந்த நடுநிலைமை தமிழாய்வில் என்றும் தேவையாக இருக்கக் கூடிய ஒன்று. தன் மாணவர்களில் அந்த நோக்கை வலியுறுத்தி பயிற்றுவித்தது தமிழில் ஒரு மரபை உருவாக்கியது.

வ.அய்.சுப்ரமணியம் அவர்கள் 29-6-2009 அன்று காலமானார்.