Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
நீல நாராயணன் Back to List
\"\"

திரு. நீலநாராயணன்
(பெரியார் விருது பெற்றவர்)
    இளமைக்கால முதல் தன்மான இயக்கத்தின் தளர்வடையாத் தொண்டராக தந்தை பெரியாரின் கொள்கைகளை உறுதிதயோடு நடைமுறைப்படுத்தும் சுயமரியாதைச் சுடராக  எத்துணை துன்ப துயரங்கள் அடுக்கடுக்காகப் படையெடுத்தாலும் சலனமடையாத உரமுடைய உள்ளம் பெற்றவராக-உழைப்பு உழைப்பு. ஒயாத உழைப்பின் உருவமாகத் திகழ்பவர் குமரி மாவட்டம் தந்த உடன் பிறப்பு நீலநாராயணன் அவர்கள்.
    கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளராக அவர் பொறுப்பேற்று ஏழை எளிய சாதாரண சாமானிய மக்களின் பாதுகாப்பு அரண் கழகம் என்பதை நிலைநாட்டும் வகையில் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் பொன்னேடுகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.
    அண்ணா அவர்க்ள கூறிய கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற மூன்று சொற்களின் வடிவமாகவும்-எந்த நிலையிலும் அமைதியிழக்காது பணிபுரியும் பொறுமையின் களஞ்சியமாகவும்-கழக அமைப்புக்களை இணைத்துச் செயல்படும் ஆற்றலில் ஈடு இணையற்றவராகவும் போற்றப்படும் செம்மல் நீலநாராயணன் ஆவார்.
    நாற்பதாயிரம் கிளைக் கழகங்கள் - அவைகள் இணைந்த ஒன்றிய நகர மாவட்ட அமைப்புகள் இவற்றுக்கான கட்சித் தேர்தலை முறைப்படியும் உரிய நேரத்திலும் நடத்துவதற்குத் தலைமைக் கழகத்தின் அலுவலகமும்-அலுவலர்களும் இராப்பகலாக இயங்கினாலும் கூட கழகத்தின் முப்பது லட்சம் உறுப்பினர்களின் கட்டுக்கோப்பு குலையாமல் - அத்துணை அமைப்புகளின் தேர்தலையும் நடுநிலை பிறழாது விருப்பு வெறுப்பின்றி ஒரு தலைமைக்கழக செயலாளருக்குரிய பொறுப்புடன் அணுகி முகச்சுளிப்போ முணுமுணுப்போ இன்றி எந்நேரமும் எறும்பு பொல் சுறுசுறுப்புக் காட்டும் இவரது எளிய இயல்பினாலன்றொ வெற்றிகரமாக நிறைவெற்ற முடிகிறது.
    தலைவர் கலைஞரின் அன்பு உடன் பிறப்பாக இருந்த தந்தை பெரியார் அறிஞர் அண்ணா இவர்களின் கோட்பாடுகளை நிறைவேற்றும் பணி தொடர்ந்து எமர்ஜன்சி காலத்து அடக்கு முறையில் ஓராண்டு மிசாக் கைதியாக அடைக்கப்பட்டு சிறையில் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட நெரத்திலும் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்ட கழகத்தின் அமைப்புச் செயலாளர் நீலநாராயணன் அவர்களின் இலட்சியப் பிடிப்பையும் தியாகத்தையும் நெஞ்சத்துணிவையும் பாராட்டும் வகையில் சென்னை மாவட்டக் கழகம் நடத்தும் முப்பெரும் விழாவில் (1987) தலைமைக்கழகத்தின் பெரியார் விருதினை தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.