Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
முதுபெரும்புலவர். தமிழ்மேதை த. சாஸ்தாங்குட்டிப்பிள்ளைBack to List

முதுபெரும்புலவர். தமிழ்மேதை த. சாஸ்தாங்குட்டிப்பிள்ளை

    சாஸ்தாங்குட்டிப்பிள்ளை அவர்கள். தமிழ்ப்பெரும் இமயம் சதாவதானி என்று பாரதப்புகழ் பெற்ற பெருமகன் ஷெக்குத்தம்பி பாவலர் அவர்களிடம் 25-வருடங்கள் தமிழ்ப் படித்தார். தினமும் தெங்கம்புதூரிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள இடலாக்குடி ஊருக்கு கால் நடையாகவே நடந்துச் சென்று படித்தவர்கள்! ஓன்றல்ல இரண்டல்ல 25 வருடங்கள்! அவர்களுக்கு திருமணம் முடிந்து இல்லத்தரசி அவர்கள் மூன்று மாதங்களெ வாழ்ந்தார்கள்.  அவர்கள் மறைந்தப் பின் திருமணமே வேண்டாம் என்று பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார். உடன் பிறந்த தம்பியின் வீட்டிலிருந்து வேளா வேளைக்கு உணவு வரும். பாடம் நடத்துகிற அறையிலிருந்து எதிரில் சுமார் நூறு அடி தூரத்தில் தம்பியின் வீடு. தம்பியின் குடும்பத்தார் மிகவும் அன்பாக பரிவுடன் இருந்தார்கள். பிள்ளை அவர்களை நன்கு கவனித்துக் கொண்டார்கள்
    குமரி மாவட்டத்தில் இன்றுள்ள தமிழ்ப் பட்டதாரிகளில் மற்றும் அறிஞர்களில் பலர் சாஸ்தாங்குட்டிப்பிள்ளை அவர்களின் மாணவர்களே.
    நாகர்கோவிலிலிருந்து சுமார் ஐந்தாவது மைலில் இருக்கும் சிற்றூர் தெங்கம்புதூர். அங்கு ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து கொண்டு தமிழ் பேரொளிப் பரப்பினார்.
சாஸ்தாங்குட்டிப் பிள்ளை அவர்கள் ஒரு நல்ல குருவாக வாழ்தார். வாழ்க அவர் புகழ்!