Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
Hot News
இந்தியர் - தமிழர்

இந்தியர் - தமிழர்


இந்தியர் அனைவரும் தமிழர் அல்லர் .
ஆனால் தமிழர் அனைவரும் இந்தியர்.

இது புரியுமானால்..

வெள்ளாளர் அனைவரும் நாஞ்சில் வெள்ளாளர் அல்லர் .
நாஞ்சில் வெள்ளாளர் அனைவரும் வெள்ளாளர் .

இது புரியும் .

திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரே நெற்க்களஞ்சியமாக "நாஞ்சில் நாடு " திகழ்ந்தது . எனவே விவசாயிகளான நம்மை வெள்ளாளர் என அழைத்தனர் . அக்காலத்தில் கிருத்துவ மதம் நம் நாட்டிலும் புகுந்ததால், திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரே விவசாயிகளான நம்மை  " இந்து வெள்ளாளர் "என பதிவு செய்தனர் .

திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ், பல சிறு நாடுகள் இருந்ததால், ஒவ்வொரு நாட்டு  மக்களை குறிப்பிட, அந்தந்த நாட்டு பெயரோடு இணைத்து குறிப்பிடுகையில் , நம்மை "நாஞ்சில் நாட்டு  வெள்ளாளர்" என அழைத்து , சமஸ்தான ஆவணங்களில் பதிவு செய்யபட்டுள்ளனர் .

சுதந்திரத்துக்கு பின், 1956 -ல் தாய் தமிழகத்துடன்  இணைத்த பிறகு , தமிழகத்தில் உள்ள மற்ற வெள்ளாளர்கள் , அவர்களின் நாட்டு பெயரோடு உட்பிரிவை இணைத்து குறிப்பிட்டு, பல அரசு சலுகைகளை பெற்று அனுபவித்து வருகின்றனர் .

நமது சமுதாய பெரியவர்களும் , சங்கம் சார்ந்தவர்களும்  பேசும்போது, பத்திரிகையில் எழுதும் போது, BANNER, POSTER, INVITATION, NOTICE PRINT செய்யும் போது  வெள்ளாளர்  என்றே பயன்படுத்தியதால், இளைய தலைமுறையினருக்கும் தங்கள் சாதி பற்றிய புரிதல் வரவில்லை.

இனியாவது பேசும்போது, எழுதும் போது, PRINT செய்யும் போது உட்பிரிவை குறிப்பிடும் வகையில்   "நாஞ்சில் நாட்டு  வெள்ளாளர்" என பயன்படுத்த வேண்டுகிறோம் .

நன்றி !!